states

img

‘ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்து ; பிரிவு 370-ஐ மீட்டெடுப்பதே இலக்கு’ சிபிஎம் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி முழக்கம்

குல்காம் (ஜம்மு-காஷ்மீர்), செப்.5  அரசியலமைப்புப் பிரிவு 370 வழங்கிய சிறப்பு உரிமையும், மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப் பட்ட பிறகு, முதன் முறையாக ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ லில், குல்காம் தொகுதியில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் பொறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீரில் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்ட மன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் ஆகிய கட்சி களை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது செங்கொடியின் கோட்டை யாகத் திகழும் குல்காம் தொகுதி யில் 5-ஆவது முறையாக முகமது யூசுப் தாரிகாமியை களமிறக்கி யுள்ளது. 

உரிமைக்குரலாக ஒலிக்கும் காஷ்மீரத்து சிங்கம்

முகமது யூசுப் தாரிகாமியை, சமகால அரசியலில் ‘காஷ்மீரத்து சிங்கம்’ என்று வர்ணித்தால் மிகை யல்ல. கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைக் குரலாகவும், மதவெறிக்கு எதிரான உக்கிரமான குரலாகவும் ஒலித்தவர் அவர். அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக காஷ்மீரிகளின் குரலை மட்டுமல்ல; காஷ்மீரின் உரிமைக் காக ஒட்டுமொத்த இந்திய மக்க ளின் குரலையும் ஒருங்கிணைப் பதற்காக செங்கொடியின் தலைவ ராக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்த மகத்தான தலைவர் தாரிகாமி.

அத்தகைய தலைவரை அவ ரது சொந்தத் தொகுதியான குல்காம் மக்கள் மீண்டும் வேட்பாள ராக பெரும் உற்சாகத்துடன் வர வேற்கும் காட்சிகள் நெகிழ்ச்சி யை ஏற்படுத்துகின்றன. ஆயிரக் கணக்கான மக்கள் புடைசூழ சென்று ஆகஸ்ட் 27 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் தாரிகாமி. வேட்புமனு தாக்கலுக்கு முன்ன தாக தொகுதி முழுவதும் பல் வேறு மையங்களில் பெரும் எண் ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன. 

செங்கொடிகளால் நிரம்பி வழிந்த பொதுக்கூட்டங்கள்

முற்றிலும் இளைஞர்கள் மட்டுமே பங்கேற்ற ஒரு மாபெரும் பேரணியை ஜம்மு - காஷ்மீர் மாண வர் சங்கமும், ஜம்மு - காஷ்மீர் ஜன நாயக வாலிபர் சங்கமும் இணைந்து நடத்தின. இந்தப் பேர ணிகளின் சங்கமமாக, வேட்புமனு தாக்கல் தினத்தன்று லாரூ நகரில் பல்லாயிரக்கணக்கானோர் பங் கேற்ற பிரம்மாண்டப் பேரணி ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘சிபிஐ (எம்) ஜிந்தா பாத்’ முழக்கங் களை விண்ணதிர எழுப்பியது. ஏராளமான பொதுமக்களும் பங் கேற்ற இந்தப் பேரணியின் நிறை வில் உரையாற்றிய தாரிகாமி, காஷ்மீருக்கு ஏற்பட்டுள்ள அனை த்து சவால்களையும் முறியடித்து மாநிலத்தையும் தேசத்தையும் காக்கும் மகத்தான போராட்டத்தில் ஒன்றுபடுவோம் என அழைப்பு விடுத்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு ஆகஸ்ட் 28 முதல் கடந்த  ஒரு வார காலமாக தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ள தாரிகாமிக்கு செல்லுமிடமெல்லாம் மக்கள் உற் சாக வரவேற்பு அளித்து வருகின்ற னர். ஆகஸ்ட் 28 அன்று சத்தாபால் நகரில் மற்றுமொரு மிகப்பெரும் பேரணி செங்கொடிகளால் நிரம்பி வழிந்தது. 

மோடி அரசின் மாய்மாலத்தை அம்பலப்படுத்த வாய்ப்பு!

“2014-இல் மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி ஏற்பட் டது முதல் ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் முற்றாக பறிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்க மிகச்சரியான சந்தர்ப்பம் இப்போது கிடைத் துள்ளது” என்று பேரணியில் பேசிய தாரிகாமி, “சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட உரிமைகளை பறித்துவிட்டு, இப்பிரதேசம் முழுவதும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவிட்டதாகவும் ஒன்றிய மோடி அரசு மாய்மாலம் செய்கிறது. ஆனால் உண்மையில் எந்தப் புதிய வேலைவாய்ப்பும் ஏற்படவில்லை. அவர்கள் சொன்னது போல எந்த வளர்ச்சியும் பதிவாகவில்லை. ஜம்மு-காஷ்மீரின் வேலையின்மை விகிதம் 18.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியைவிட இரண்டு  மடங்கு ஆகும்” என்றும் அம்பலப்படுத்தினார்.

காஷ்மீருக்கே ஆப்பிள்  இறக்குமதியான அவலம்

“காஷ்மீர் மாநிலப் பொருளா தாரத்தின் மிக முக்கியமான அம்சம் ஆப்பிள் சாகுபடி உள்ளிட்ட தோட்டக் கலை துறையின் பங்களிப்பு ஆகும். விவசாயத்துறையின் இந்த முக்கியப் பிரிவு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாராள வர்த்தக உடன்பாடுகளின் விளைவாக வெளி நாட்டு ஆப்பிள்கள் தாராளமாக இறக்கு மதி ஆகின்றன. இதன்விளைவாக காஷ்மீர் ஆப்பிளுக்கு உரிய விலை  கிடைக்கவில்லை. இதனால் பல்லா யிரக்கணக்கான ஆப்பிள் விவசாயி கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். ஒன்றிய அரசு வெளி நாட்டு ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி விதிக்காததன் விளைவாக தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதேசங்களிலிருந்து இந்தியா முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பெரிய அள வில் ஆப்பிள்கள் வந்துகொண்டி ருக்கின்றன. இது காஷ்மீர் ஆப்பிள் விவசாயத்தை கிட்டத்தட்ட நிலைகுலையச் செய்துள்ளது” என்று தனது பிரச்சாரத்தில் அம்பலப்படுத்தி வருகிறார் தாரிகாமி. 

370, மாநில அந்தஸ்தை  மீட்டெடுப்பதே இலக்கு!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சட்டப்பூர்வமான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்டி, மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என முழக்கமிடும் அவர்,  காஷ்மீர் மக்களின் முதல் கோரிக்கை முழக்கமே இதுதான் என்று தமது பிரச்சாரத்தில் பேசி வருகிறார். அவரது உரைக்கும் மக்கள் மீதான அவரது தீராத நேசத்திற்கும் குல்காம் தொகுதி மக்கள் எந்த வேறுபாடுமின்றி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மீண்டும் வெல்வார் தாரிகாமி.